| 1851. | பூ  அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும்,  மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக,  சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன,  தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார். |  
      அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில்  மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்;  மா வகிரின்  உண்கணர் மடப்பிடியின் வைக -பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட  கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித்  தங்க;  தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும்  அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்;  சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச்  செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை  உடைய களிற்றியானைகள்  போல; துயின்றார் - துங்கினார்கள்.      தூ - என்பது தசை. ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல்.   ‘யானைகட்கும்  கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும்  ஒர்   உரை “யானை சேவகம் அமைந்தது  (7280)“தறிபொரு களிநல்யாதனை   சேவகம் கள்ளி”  (8837) என்பன காண்க.  இனிச்  சேவகம்  என்பது    பாதுகாவல்; வீரமறத்தொழில் குறித்து வருதலை; ‘வீரச் சேவகச் செய்கை’    (7281) என்ற  பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின்    பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம்.                   12   |