1853.சம்பக நறும் பொழில்களில், தருண வஞ்சிக்
கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார்;
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார்.

     சிலர்-; சம்பக நறும் பொழில்களில் - நறுமணம்  உள்ள சண்பகச்
சோலைகளில்; தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என - இளைய
வஞ்சிக் கொடிகள் அழுது  முறிந்தனபோல; குழைந்தார் - சோர்ந்து
தங்கினார்கள்;  சிலர்-;  வம்பு அளவுகொங்கையொடு - கச்சு அணிந்த
தனங்களுடன்;  வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள்என -
மணற்குன்றுகளில் வளர்கின்ற அழகியபவளக் கொடிகள்போல; அசைந்தார்-
களைத்து  உறங்கினார்கள்.

     வாலுகம் - மணல்மேடு, முலை. பவளவல்லி - மகளிர் என உவமை
காண்க.                                                     14