1855. | குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்னத் துங்க முலையில் துகள் உறச் சிலர் துயின்றார்; அங்கை அணையில், பொலிவு அழுங்க, முகம் எல்லாம் பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார். |
சிலர் -; குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்ன - குங்கும மலையிலேகுளிர்ந்த பனி திரண்டது போல; துங்க முலையில் - தூய தனங்களில்; துகள் உற -மணற்பொடி பரவ; துயின்றார் - தூங்கினர் ; சிலர்-; அங்கை அணையில் -தமது அழகிய கையாகிற அணையிலே; முகம் எல்லாம் - தங்கள் முகம் எல்லாம்; பொலிவுஅழுங்க - ஒளி மலர்ச்சி வாட; பங்கயம் முகிழ்த்தன என - தாமரை மலர்கள் குவிந்துள்ளன என்று கருதும்படி ; படிந்தார் - கிடந்து தூங்கினார்கள். சிவந்த நகில்கள் வெண்மணல் துகள் பரவியிருப்பது குங்கும மலையில் பனி குழுமியது போலும்என்றார். பெரும்பாலும் ஆடவரினும் மகளிரே. அதிகம் துன்பத்தில் துவளுவர் ஆதலின் அவர்களது துயரத்தையே மிகுதியாக இங்குக் காட்டினார். 16 |