அறுசீர் விருத்தம் 1857. | ‘பூண்ட பேர் அன்பினாரைப் போக்குவது அரிது; போக்காது, ஈண்டுநின்று ஏகல் பொல்லாது; எந்தை! நீ இரதம் இன்னே தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை ஒர்ந்து, என்னை, ” அங்கே மீண்டனன்’ என்ன மீள்வர்; இது நின்னை வேண்டிற்று’ என்றான். |
பூண்ட பேர் அன்பினாரை -(நம்மிடத்தில்) பேரன்புடைய இவர்களை; போக்குவது அரிது - நம்மை விட்டுப்பிரித்துப் போகச் செய்வது இயலாது; போக்காது - இவர்களை அனுப்பாமல்; ஈண்டுநின்றுஏகல் - இங்கிருந்து மேலும் வனத்திற்குள் செல்வது; பொல்லாது - நல்லதன்று (தீங்கு தரும்ஆகையால்); ‘எந்தை! - என் தந்தை போன்ற சுமந்திரனே நீ -; இன்னே -இப்பொழுதே; இரதம் தூண்டினை- தேரைச் செலுத்தினையாகி மீள்வது ஆக்கின் -திரும்பிப்போவதைச் செய்தால்; சுவட்டை ஓர்ந்து - தேர்ச்சுவட்டை ஆராய்ந்து; என்னை ‘அங்கே மீண்டனன்’ என்ன - என்னை அங்கே அயோத்திக்குத் திரும்பியவனாகக்கருதி; மீள்வர் - திரும்பிச் செல்வர்; இது-; நின்னை - உன்னை; வேண்டிற்று’- வேண்டிக் கேட்டுக்கொள்கிற செயலாகும்; என்றான் -, நகர மாந்தர் அனைவரும் வனவாசம் செய்தல் ஆனது, ஆதலின் சுமந்திரன் தேரைத் திருப்பிஊர் சென்றால், தேர்ச்சுவடு அயோத்தி போவது கண்டு இராமன் திரும்பி ஊர் சென்றுவிட்டான்எனக் கருதி நகர மாந்தரும் அயோத்திக்கு திரும்புவராதலின் அதனைச் செய்க என்று வேண்டினன். 18 |