1850. | ‘ “தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா வாருடை முலையொடும், மதுகை மைந்தரைப் பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன், தேரிடை வந்தனென், தீது இலேன்” என்கோ? |
‘பழைய நண்பினேன் - நெடுங்கால நண்பனாகிய யான்; தார் உடை மலரினம்ஒதுங்கத் தக்கிலா - மாலையாகத் தொடுக்கும் மலரினும் நடப்பதற்குத் தகுதியில்லாத; வாருடை முலையொடு - கச்சணிந்த நகிலாளாகிய சீதையோடு; மதுகை மைந்தரை -வலிமையுடைய குமாரர்களை; பாரிடை - காட்டு நிலத்தில்; செலுத்தினேன் -(நடந்து செல்லுமாறு) அனுப்பிவிட்டேன்; தீதிலேன் - ஒரு தீமையும் இல்லாதவனாய்; தேரிடை வந்தனன் என்கோ?’- தேர் மேலே ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்றுசொல்வேனோ? சீதையின் மென்மைத்தன்மையை ‘மலரினும் நடத்தற்கு வருந்தும்’ என்பதால் கூறினார். ‘தேரிடை வந்தனன்’ என்பது அவர்களை நடக்க வைத்து’ என்னும் குறிப்பு உணர்த்திற்று. 21 |