1850.‘ “தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வாருடை முலையொடும், மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனென், தீது இலேன்” என்கோ?

     ‘பழைய நண்பினேன் - நெடுங்கால நண்பனாகிய யான்; தார் உடை
மலரினம்ஒதுங்கத் தக்கிலா -
மாலையாகத் தொடுக்கும் மலரினும்
நடப்பதற்குத் தகுதியில்லாத; வாருடை முலையொடு - கச்சணிந்த
நகிலாளாகிய சீதையோடு;  மதுகை மைந்தரை -வலிமையுடைய
குமாரர்களை;  பாரிடை - காட்டு நிலத்தில்;  செலுத்தினேன் -(நடந்து
செல்லுமாறு) அனுப்பிவிட்டேன்; தீதிலேன் - ஒரு தீமையும் இல்லாதவனாய்;
தேரிடை வந்தனன் என்கோ?’- தேர் மேலே ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்
என்றுசொல்வேனோ?

     சீதையின் மென்மைத்தன்மையை ‘மலரினும் நடத்தற்கு வருந்தும்’
என்பதால் கூறினார். ‘தேரிடை வந்தனன்’ என்பது  அவர்களை நடக்க
வைத்து’ என்னும் குறிப்பு உணர்த்திற்று.                            21