1861.‘வன் புலக் கல் மன
     மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்புற உடைந்து
     இரங்கும் மன்னன்பால்,
உன் புலக்கு உரிய சொல்
     உணர்த்தச் செல்கெனோ?
தென்புலக் கோமகன்
     தூதின் செல்கெனோ?

     ‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன்- வலிய புலன்களையும்
கல்போன்றமனத்தையும்  உடைய அறிவற்ற  வஞ்சகனாகிய யான்; என்பு
உலப்புற  உடைந்து  இரங்கும்மன்னன்பால் -
உடம்பு அழியும் படி
மனம் முறிந்து வருந்தும் தசரதனிடத்து; உன் புலக்குஉரிய சொல்களை
உணர்த்தச்  செல்கெனோ? - 
உனது  அறிவு வாய்ந்த சீரிய
வார்த்தைகளைஉணர்த்தப் போகின்றேனோ (அல்லது) ; தென்புலக்
கோமகன் தூதின் செல்கெனோ? - !
இயமனது தூதுவன்போலச் செல்லக்
கடவேனோ’

     செய்தி சொல்லு முன்னரே தசரதன் இறந்துபடுவான் ஆதலின், ‘இயம
தூதன்போலச் செல்வேனோ’என்றான்.                            22