துயர் மிகுதியுற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்துப் பேசுதல் 1865. | தடக் கையால் எடுத்து, அவன் - தழுவி, கண்ண நீர் துடைத்து, வேறு இருத்தி, மற்று இனைய சொல்லினான் - அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம் கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான். |
அடக்கும் ஐம்பொறியோடு - (புலன்வழிச் செல்லாது) அடக்கிய ஐம்பொறிகளோடு;கரணத்து அப்புறம் - அந்தக்கரணமாகிய மன முதலியவற்றுக்கு அப்பால்; கடக்கும் -கடந்து செல்கின்ற; வால் உணர்வினுக்கு - தூய மெய்ஞ்ஞானத்துக்கு; அணுகும் காட்சியான் - நெருங்கிப் புலனாகின்ற தோற்றம் உடைய பரம்பொருளாகிய இராமன்; அவன் - அந்தச் சுமந்திரனை; தடக்கையால் எடுத்து - (தனது) பெரிய கைகளினால்தூக்கி; தழுவி -; கண்ணநீர் - கண்ணிலிருந்து வரும் நீரை; துடைத்து -; வேறுஇருத்தி - தனியாக இருக்கவைத்து; இனைய - இத்தகைய (பின்வரும்) சொற்களை; சொல்லினான் - சொன்னான். பொறிபுலன்களுக்குஅப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கேபுலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பது கூறப்பட்டது. வனவாசத்தை ஒப்புக்கொள்ளாதகருத்தினன் சுமந்திரன் ஆதலால், அவனை இசைவித்துத் திருப்பி அனுப்பவேண்டித் தனியேஅழைத்துச் சென்று பேசினான் இராமன் என்க. 26 |