1866.‘பிறத்தல் ஒன்று உற்றபின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்!
புறத்துறு பெறும் பழி பொது இன்று எய்தலும்,
அறத்தினை மறத்தியோ, அவலம் உண்டு எனா?

     ‘பிறத்தல்என்று உற்ற பின் - இவ்வுலகில் பிறந்தாயிற்று  என்ற
பிறகு; பெறுவ யாவையும்- நேரக்கடவ இன்பதுன்பங்கள் எல்லாவற்றையும்;
திறத்துளி - அவ்வவற்றின் கூறுபாட்டோடே;உணர்வது  ஓர் -
அறிகின்றதாகிய ஒப்பற்ற;  செம்மைஉள்ளத்தாய்!- நேர்மையான மனம்
உடைய சுமந்திரனே;  அவலம் உண்டெனா -துன்பம்
உண்டாகின்றதே
என்று கருதி;  புறத்து  உறு பெரும்பழி - உலகரால்சொல்லப்படும்
பெரியபழியை;  பொது  இன்று எய்தலும் -சிறப்பாக அடைதலையும்
(உணராது);  அறத்தினைமறத்தியோ?’ -  தருமத்தினைமறந்தாயோ?’

     துன்பத்திற்குப் பயந்து தருமத்தை மறக்கலாமோ? தருமத்தை மறந்தால்
பழி வந்து சேரும் அல்லவா? உலகத்தில் பிறந்த பிறகு இன்ப துன்பங்களை
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற வேண்டுமே அன்றித் துன்பத்திற்குப்
பயந்து அறத்தை மறத்தல் கூடாது என்றான். உள்ளி - உளி - தொகுத்தல்
விகாரம்.                                                      27