1869. | ‘கான்புறம் சேறலில் அருமை காண்டலால், வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம், யான் பிறந்து, அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ?- ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! |
‘ஊன்திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது) உடலைத் திறந்துஉயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே!; கான் புறம் சேறலில் அருமை காண்டலால் -காட்டின் புறத்தே செல்லுதலால் உண்டாகும் அருமையை (துன்பத்தை) நினைத்து (நான்)திரும்புதலால்; வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் -வானளாவிய புகழ் பெற்ற மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்; யான் பிறந்து அறத்தினின்று இழக்கிற்று -யான் பிறந்த படியால் அறத்திலிருந்து தவறியது; என்னவோ?’ - என்றுஎல்லாராலும்சொல்லப்படவோ.’ வனவாசத்தின்அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ் கெடும் என்றானாம். 30 |