1871. | ‘முந்தினை முனிவனைக் குறுகி , முற்றும் என் வந்தனை முதலிய மாற்றம் கூறினை, எந்தையை அவனொடும் எய்தி,“ ஈண்டு, என சிந்தனை உணர்த்துதி” என்று, செப்புவான். |
‘முனிவனை - வசிட்டனை; முந்தினை குறுகி - முற்பட்டுச் சென்று அணுகி; முற்றும் - நிரம்பிய; என் வந்தனை முதலிய மாற்றம் கூறினை- என் வணக்கம்முதலிய வார்த்தைகளைச் சொல்லி; அவனொடும் எந்தையை எய்தி - அவ் வசிட்டமுனிவனொடும் என் தந்தையை அடைந்து; ழுஈண்டு - இங்கே; என் சிந்தனை - என்மனக் கருத்தை; உணர்த்துதி’ - தெரிவிப்பாய்; என்று -; செப்புவான் -சொல்கின்றான். முனிவனோடுதான் தயரதனிடம் போகவேன்டும் என்ற குறிப்பின் திறம் உணர்க. 32 |