1872. | ‘முனிவனை, எம்பியை, “முறையில் நின்று, அரும் புனித வேதியர்க்கும், மேல் உறை புத்தேளிர்க்கும், இனியன இழைத்தி” என்று இயம்பி, “எற் பிரி தனிமையும் தீர்த்தி” என்று உரைத்தி, தன்மையால். |
முனிவனை- வசிட்ட முனிவகைக் கொண்டு; ‘முறையில்நின்று - நெறியில்நின்று; அரும் புனித வேதியர்க்கும்- அருமையான தூய அந்தணர்களுக்கும்; மேல் உறைபுத்தேளிர்க்கும்-மேல உலகில் வசிக்கும் தேவர்களுக்கும்; இனியன - நன்மையானசெயல்களை; இழைத்தி’ - செய்வாயாக; என்று எம்பியை இயம்பி -என்று என்தம்பி பரதனுக்குச் சொல்லி; ‘என் பிரி - என்னைப் பிரிதலால்உளதாகும்; தனிமையும் தீர்த்தி’ - தனிமைத்துன்பத்தையும் நீக்குக; என்று-; தன்மையால் உரைத்தி - இதமாகச் சொல்வாய். பரதனுக்கு இராமன் சுமந்திரன்பால் சொல்லி அனுப்பிய செய்திகள் இதனுட் கூறப்பெற்றன. 33 |