இராமன் முதலிய மூவரும் இரவில் செல்லுதல் 1886. | தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும், மை அறு கருணையும் , உணர்வும், வாய்மையும், செய்ய தன் வில்லுமே, சேமமாகக் கொண்டு, ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. |
‘ஐயனும் - இராமனும்;அல்லின் நாப்பண் - நள்ளிரவில்; தையல்தன்கற்பும் - சீதையின் கற்பும்;தன் தகவும் -தன் மேன்மைப் பண்பும்; நம்பியும் - இலக்குவனும்; மை அறு கருணையும் - குற்றமற்ற அருளும்; உணர்வும் -ஞானமும்; வாய்மையும் -சக்தியமும்; செய்ய தன் வில்லும் - நேரிய தனது வில்லும் (ஆகிய இவற்றையே); சேமம் ஆகக் கொண்டு - தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு;போயினான் - சென்றான். தகவும், கற்பும், கருணையும், வாய்மையும் அருவப் பொருள்கள். தம்பியும், வில்லும்உருவப்பொருள்கள். இரண்டையும் உள்ளும் வெளியும் பாதுகாக்கும் உதவிகளாகக் கூறியது ஒரு நயம்.‘வில்லுமே’ ‘ஏ’ காரம் சிறப்பு. ‘நாப்பணே’ ‘ஏ’ காரம் ஈற்றசை. 47 |