வசிட்டன் சுமந்திரனோடு தயரதனை அடைதல் 1894. | ‘நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க, வள்ளல்; ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான், தருமத்திற்கு உறுதி பார்ப்பான்; வென்றவர் உளரோ மேலை விதியினை?’ என்று விம்மிப் பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான். |
‘வள்ளல் - தசரதன; நின்று உயர் பழியை அஞ்சி - உலகத்தில் நிலைத்துநின்று மேன்மேல் வரும் பழிக்குப் பயந்து; தடுக்க நேர்ந்திலன்- இராமன் காடுசெல்வதைத் தடுக்க உடன்பட்டானில்லை; தருமத்திற்கு உறுதி பார்ப்பான் - தருமம்நிலைபெறும் தன்மையை எப்பொழுதும் நாடுபவனாகிய இராமன்; நான் உரைத்தல் ஒன்றும்நோக்கான் - (வனம் போக வேண்டாம் என்று) நான் சொல்லியது ஒரு வார்த்தையும் கருதான் ஆயினன்; மேலை விதியினை வென்றவர் உளரோ?’ - பழைய வினையை வெற்றி கொண்டவர் யாராவது இருக்கிறார்களா?;’ என்று விம்மி - என்று புலம்பிக்கொண்டு; சுமந்திரனோடும்-; மன்னன் பொன் திணி கோயில் - தசரதனது பொன்னாற் செய்தஅரண்மனைக்குள்; போனான் -. வசிட்டன் உரைத்தது ‘ஐய! நீ ஒரு ஓங்கிய, கல்தடம் காணுதி என்னின், கண் அகல் மல் தடந்தானையான் வாழ்கிலான்’ என்பது (1766). நகர் நீங்குபடலம்160 ஆம் பாடலும் (1764.) இதனுடன் கருதத்தக்கதாகும். 55 |