தயரதன் வினாதல்

1896. ‘இரதம் வந்து உற்றது’ என்று,
     ஆங்க யாவரும் இயம்பலோடும்,
வரதன் வந்துற்றான் என்ன,
     மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம்
     பொருக்கென விழித்து நோக்கி,
விரம மா தவனைக் கண்டான்.
     ‘வீரன் வந்தனனோ? என்றான்.

     ‘இரதம் வந்து உற்றது’ என்று- (காடு சென்ற) தேர் வந்து சேர்ந்தது
என்று; ஆங்கு யாவரும் இயம்பலோடும் - அங்குள்ள அனைவரும்
சொல்லியவுடன்; மன்னனும் -தசரதனும்; ‘வரதன் வந்துற்றான்’ என்ன -
இராமன் வந்து  சேர்ந்தான் என்று கருதி; மயக்கம் தீர்ந்தான் - மன
மயக்கம் நீங்கினவனாய்; புரைதபு கமல நாட்டம் -குற்றம் அற்ற தாமரை
மலர்போலும் கண்கள்; ‘பொருக்’ என - சடக்கென; விழித்துநோக்கி -
திறந்து பார்த்து; விரத மாதவனைக் கண்டான் - நோன்பு மேற்கொண்ட
சிறந்த வசிட்ட முனிவனைக் கண்டு; ‘வீரன் வந்தனனோ’? - இராமன்
திரும்பி வந்தானோ; என்றான் -

     ‘பொருக்’ விரைவுக் குறிப்பு மொழி. வரதன் - இராமன்; வேண்டுவார்
வேண்டுவன தருபவன்என்னும் பொருளது.                         57