(இந்த இரண்டு செய்யுட்களும், ‘மண்ணுறு முரசு இனம்’ எனத் தொடங்கும் முதற் பாடலின்முன், படலத்தின் தொடக்கத்தில் உள்ளன.) 190. | எய்திய முனிவரன் இணைகொள் தாமரை செய்ய பூங் கழலவன் சென்னி சேர்த்த பின், ‘வையகத்து அரசரும் மதி வல்லாளரும் வெய்தினில் வருக’ என மேயினான் அரோ. |
முனிவரன் - வசிட்டன்; செய்ய பூங்கழலவன் - தயரதன்; மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர், இங்கே அமைச்சர்; வெய்து - விரைவாக; அரோ- அசை. 4-1 |