தயரதன் பிரிவால் கோசலை புலம்பல் 1900. | ‘உயிர்ப்புஇலன், துடிப்பும் இல்லன்’ என்று உணர்ந்து, உருவம் தீண்டி, அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு ஆர் உயிர் இன்மை தேறி, மயில் குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் - வெயில் சுடு கோடைதன்னில் என்பு இலா உயிரின் வேவாள். |
குலம் மயில் அனைய நங்கை கோசலை - சிறந்த மயிலை ஒத்த பெண்ணாகியகோசலையானவள் ‘உயிர்ப்பு இலன்; துடிப்பும் இல்லன்’ என்று் உணர்ந்து - தசரதனுக்குமூச்சு இல்லை துடிப்பும் தொட்டு; அயிர்த்தனள் நோக்கி - ஐயுற்றுப் பார்த்து; மன்னற்கு - தசரதனக்கு; ஆர் உயிர் இன்மை தேறி - அரிய உயிர் இல்லை என்பதுதெளிந்து; வெயில் சுடு கோடைதன்னில்- வெள்ளில் சுடுகின்ற கோடைக் காலத்தில்; என்பு இலா உயிரின் - எலும்பு இல்லாத (புழு முதலிய) பிராணிகள் போல; வேவாள் -வெந்து; மறுகி - மனம் சுழன்று; வீழ்ந்தாள் - விழுந்தாள். இறுதியடியின் சொல்லாட்சியை ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே என்பதனோடு(குறள்.77.) ஒப்பிடலாம். 61 |