தேவிமார் அனைவரும் வந்து புலம்புதல்   அறுசீர் விருத்தம் | 1908. | ஆழி  வேந்தன் பெருந்தேவி      அன்ன பன்னி அழுது அரற்ற,  தோழி அன்ன சுமித்திரையும்       துளங்கி ஏங்கி உயிர் சோர,  ஊழி திரிவது எனக் கோயில்       உலையும் வேலை, மற்று ஒழிந்த  மாழை உண்கன் தேவியரும்,       மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார். |  
      ஆழிவேந்தன்பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற -    சக்கரவர்த்தியின் மூத்தபட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட   வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுபுலம்ப; தோழி   அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர - அவளுடைய   உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து   புலம்பி உயிர் தளர;ஊழி  திரிவது என -  பிரளயகாலத்தில் உலகம்   கழல்வது  போல;  கோயில் உலையும்வேலை -அரண்மனை   நிலைதடுமாறுடம் போது ; மற்று  -;  ஒழிந்த மாழை உண்கண்   தேவியரும்- மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை  உண்ட   கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின்குழாத்தின்-    மயிற்கூட்டம் போல; வந்து -;  இரைத்தார் -கூச்சலிட்டுப் புலம்பினர்.       மற்று - பிறிது  என்னும் பொருளில் வந்த இடைச்சொல்.        69  |