191. | ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி, நாளும் நல் தவம் புரிந்து, நல் நளிர் மதிச் சடையோன் தாளில் பூசையின் கங்கையைத் தந்து, தந்தையரை மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள். |
நளிர் மதிச் சடையோன் - சிவபிரான். சிவனை வழிபட்டுக் கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு சேர்ப்பித்தவன்பகீரதன். 66-1 |