1921. | மான அரவின் வாய்த் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்வழி ஆன கடுவுக்கு, அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து, போன பொழுதில் புகுந்த உயிர் பொருந்தார் ஒத்தார் - பொரு அரிய வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர். |
ஆண்டையோர்- அங்கேயிருந்த அந்நகரத்தவர்; பொரு அரிய வேனில் மதனை மதன்அழித்தான் - ஒப்பற்ற வசந்தகாலத்துகுரிய மன்மதனை அழகால் செருக்கழித்த இராமன்; மீண்டான் என்ன- அயோத்திக்குத் திரும்பிவிட்டான் என்று கருதி; மானஅரவின் -சீற்றம் பொருந்திய பாம்பின்; வாய்த் தீய வளை வான்தொளைவாள் எயிற்றின்வழி ஆன கடுவுக்கு-வாயில் உள்ள தீய வளைந்த சிறந்த விடப்பல்லின் ஆக வரும் விடத்துக்கு; அரு மருந்தா -அரியமருந்தாக; அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து - உண்ணக்கூடியசாவா மருந்தைப் பெற்று உயிர் பிழைத்து; போன பொழுதில்-வெளியே போன உடனேயே; புகுந்த உயிர்- திரும்ப உள்ளே வந்து புகுந்த உயிரை; பொருத்தார் ஒத்தார் -தாங்கியவர்களைப் போன்றார்கள். பாம்பினாற் கடியுண்ட உடனே வெளியேறிய உயிர் அமுதம் பெற்று உய்ந்து மீண்டும் உள்ளேபுகுந்தாற் போல முதல்நாள் இரவில் சோர்ந்திருந்த நகரினர் காலையே தேரின் சுவடு கண்டுஅயோத்தி நகர் நோக்கி மகிழ்ந்தபடி. உள்ளது என்றார். அமுதம் - சாவாமருந்து. 82 |