1922. | ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி கண்டார், அயற்பால வேறு சென்ற நெறி காணார்; விம்மாநின்ற உவகையராய், மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் ஏறி ஓடுங்கும் எறிகடல்போல், எயில் மா நகரம் எய்தினார். |
ஆறு செல்லச் செல்ல - வழி நடந்து போகப் போக; தேர் ஆழி கண்டார் - தேர்ச் சக்கரத்தை (சுவட்டை)ப் பார்த்து; அயற்பால வேறு சென்ற நெறி காணார் - பக்கத்தில் வேறாகச் சென்ற வழிகள் (சுவடுகள்) எதுவும் காணாது; விம்மாநின்ற - மேலும்மேலும் தளும்புகின்ற; உவகையராய் - மகிழ்ச்சியோடு; மாறி உலகம் வகுத்த நாள் -பிரளயம் நீங்கி மீண்டும் படைப்பு நிகழ்ந்த காலத்தில்; வரம்பு கடந்து மண்முழுதும் ஏறி- எல்லை கடந்து பூமி முழுவதும் மூடி மேல் சென்று (பிறகு); ஒடுங்கும் எறிகடல் போல் -தன் எல்லைக்குள் ஒடுங்கி அடங்குகின்ற அலைவீசும் கடலைப் போல; எயில் மாநகரம்எய்தினார் - மதிலாற் சூழப் பெற்ற அயோத்தி என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள். பெருந்திரளாகக் காடு சென்று மீண்டும் நகர் திரும்பிய மக்கள் வெள்ளத்துக்கு ‘ஏறிஒடுங்கி அடங்கும் கடல்’ உவமையாம். உவமையணி. 83 |