1929. | மா கந்தமும், மகரந்தமும், அளகம் தரும் மதியின் பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான், மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண் நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா. |
மா கந்தமும் - மிக்க நறுமணத்தையும்; மகரந்தமும் - வாசனைப் பொடியும் கலந்து பொருந்திய; அளகம் - கூந்தல்; தரும் - பெற்ற; மதியின் பாகம்தரும் நுதலாளொடு - அரைச்சந்திரன் வடிவாயமைந்து நெற்றியை உடைய சீதையோடு; பவளம்தரும் இதழான் - பவளத்துக்குச் செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம்மின்னொடு தனி வருகின்றது என்ன - மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது போலவும்; மிளிர் பூண் - அழகிய அணி அணிந்த; நாகம் - ஆண்யானை; பிடியோடு தனி வருகின்றது என்ன - பெண் யானையோடு தனித்து வருகின்றது போலவும்; நடவா -நடந்து சென்று. நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும் கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல்வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை ‘அளகம் தரும் மதியின் பாகம்’ என்றார். குளகச்செய்யுள். 4 |