193.‘ஏத்த வந்து உலகு எலாம்
     ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
     புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
     காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
     விதர்ப்பர் கூறினார்.

     பூத்தவன் - திருமால்; வேள்வியைக் காத்தவன் - விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.                             76-2