1935.கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா,
அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார்.

     கங்கை என்னும் கடவுள் திருநதி - கங்கை என்று சொல்லப்படும்
தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்;  தங்கி வைகும்
தபோதனர் யாவரும் -
தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள்
செல் கதி வந்தது’ என்று ஏமுறா -
எங்கள்மோட்ச மாகிய செல்லும்
பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண்
நாயகன் காண-
அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு;
வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள்.

     பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின்,
‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கண்ணுக்கு
அழகு,  அருளாதலின் ‘அம்’- அழகு எனப்பொருள்கொண்டது.         10