முனிவர் தவச் சாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தல் 1938. | மனையின் நீங்கிய மக்களை வைகலும் நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார், அனையர் வந்துற, ஆண்ட எதிர்ந்தார்கள்போல், இனிய மா தவப் பள்ளிகொண்டு எய்தினார். |
மனையின் நீங்கிய மக்களை - வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிள்ளைகளை; வைகலும் - நாள்தோறும்; நினையும் நெஞ்சினர் - நினைகின்ற நெஞ்சத்தோடு; கண்டிலர் நேடுவார் - காணாது தேடுகின்றவர்கள்; அனையர் வந்துற -அப்பிள்ளைகள் திரும்பத் தாமே வந்து சேர; ஆண்டு எதிர்ந்தார்கள் போல் - அங்கே(அப்பிள்ளைகளை) எதிர்ப்பட்ட பெற்றோர்களைப் போல் (மகிழ்ச்சி கொண்டு); இனியமாதவப் பள்ளி கொண்டு எய்தினார் - இனிமையான தம்முடைய தவச் சாலைக்கு (மூவரையும்)அழைத்துக்கொண்டு சென்றார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற மக்கள் திரும்பவந்துழிப் பெற்றோர் அடையும்மகிழ்ச்சி. இங்கே இராமபிரானைக் கண்ட முனிவரர் மகிழ்ச்சிக்கு உவமையாயிற்று. 13 |