1948. | மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம் தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன, கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள் பொங்கு நீர்ச் சுழி போவன போன்றவே. |
மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் - சீதையின் நீண்ட கூந்தல் தொகுதியாகியமேகக் கூட்டம்; தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன - அவள் குளிக்கின்றநீரிடத்து உள் தாழ்ந்து சுழலுவன (எது போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் -கங்கை யாற்றுடனே வந்து கலக்கின்ற யமுனா நதியின்; பொங்கு நீர்ச்சுழி - மேல்எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்; போவன போன்ற - போகின்ற தன்மை போலும். கங்கை வெண்ணிறமுடையது. யமுனை கருநிறம் உடையது. சீதையின் கூந்தல் முழுகுங்கால் நீரில்சுழலுதல் யமுனையின் சுழி போல் தோன்றுவதாகக் கற்பனை. கங்கையும் யமுனையும் கலக்கின்ற இடம் பிரயாகையாம். 23 |