1958. | பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன், கண் அகன் தட மார்பு எனும் கல்லினன், எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். |
பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள; வண்ண வன் மயிர் - கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன்தடமார்பு எனும் கல்லினன் - இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை உடையவன்; என்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய் பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பானஉடம்பை உடையவன். பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும், முன்கை மயிர்க்கும்உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர்முன்கை” என்பனவற்றை நோக்குக. 6 |