இராமன் குகனை நோக்கி ‘நாளை விடியலில்நாவாய் கொண்டு வருக’ எனல்

1968. சிங்க ஏறு அனைய வீரன்,
     பின்னரும் செப்புவான், ‘யாம்
இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை
     ஏறுதும் நாளை; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும்
     போய் உவந்து, இனிது உன் ஊரில்
தங்கி, நீ நாவாயோடும்
     சாருதி விடியல்’ என்றான்.

     சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் -
ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் கூறுவான்; ‘யாம் இங்கு உறைந்து
நாளை எறி நீர்க் கங்கை ஏறுதும் -
நாங்கள்இத்தவச்சாலையில்
தங்கியிருந்து  நாளைக்கு அவைவீசும் கங்கையாற்றைக் கடந்து  செல்ல
எண்ணியுள்ளோம் (ஆதலின்);  நீ-; யாணர்ப் பொங்கும் நின்
கற்றத்தோடும் போய்-
புதுமை நிரம்பிய உன் உறவினர்களோடும் சென்று;
உன் ஊரில் உவந்து  இனிது  தங்கி -உன்னடைய நகரத்திலே மன
மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து;  விடியல் - நாளைவிடியலில்;
நாவாயோடும் சாருதி - மரக்கலங்களோடும்  வருவாயாக;’ என்றான்-.

     குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த
வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய்
வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு.                      16