1971.அடி தொழுது உவகை தூண்ட
     அழைத்தனன், ஆழி அன்ன
துடியுடைச் சேனை வெள்ளம்,
     பள்ளியைச் சுற்ற ஏவி,
வடி சிலை பிடித்து, வாளும்
     வீக்கி, வாய் அம்பு பற்றி
இடியுடை மேகம் என்ன
     இரைத்து அவண் காத்து நின்றான்.

     அடி தொழுது - (இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக்
கேட்ட குகன்)இராமன் திருவடிகளை வணங்கி; உவகை தூண்ட - மகிழ்ச்சி
மேல் மேல் மிக;  ஆழிஅன்ன துடியுடைச் சேனை வெள்ளம்
அழைத்தனன்
- கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்
பெருக்கை அழைத்து;  பள்ளியைச் சுற்ற ஏவி - (விலங்கு முதலியவற்றால்
துன்பம்நேராவாறு) அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப்
பாதுகாக்கக் கட்டளையிட்டு; வரிசிலை பிடித்து - (தானும்) கட்டமைந்த
வில்லைப் பிடித்து; வாளும் வீக்கி -(முன்பு கழித்த) வாளையும்
அரைக்கச்சிலே கட்டி;  வாய் அம்பு பற்றி - கூரிய அம்மைப்பிடித்து;
இடியுடை மேகம் என்ன இரைத்து - இடியோடு கூடிய மழை மேகம்
போல உரத்த சத்தம்இட்டு;  அவண் - அத்தவச்சாலையில்;  காத்து
நின்றான் -
அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

     இராமன் அனுமதி தந்த மகிழ்ச்சியால் அவனைக் காக்கும் பொறுப்பை
மிகச் சிறப்பாகச்செய்கிறான் குகன்.                               19