இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காத்து நிற்றல்  

1974.மாலைவாய் நியமம் செய்து
     மரபுளி இயற்றி, வைகல்,
வேலைவாய் அமுது அன்னாளும்
     வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்;
     வரி வில் ஏந்திக்
காலைவாய் அளவும், தம்பி
     இமைப்பிலன், காத்து நின்றான்.

     வைகல் மாலை வாய் - நாளின் மாலைக் காலத்தே; நியமம்
செய்து
-செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து;  மரபுளி இயற்றி -
செய்ய வேண்டிய கடமைகளைச்செய்து;  மரபுளி இயற்றி - செய்ய
வேண்டிய முறைப்படியே செய்து; வேலைவாய் அமுதுஅன்னாளும் -
பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை ஒத்தவளும்; வீரனும் -
இராமபிரானும்; பாரின் - பூமியில்; மாலை விரிந்த நாணல் பாயல்வாய்-
வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே;  வைகினர் -
உறங்கினராக;  தம்பி - இலக்குவன்;  காலைவாய் அளவும் - காலைப்
பொழுது வரும் வரை;  வரி வில் ஏந்தி - கட்டமைந்த வில்லை ஏந்தி; 
இமைப்பிலன் - கண்இமையாது;  காத்து நின்றான் - அவ்விருவரையும்
காவல் செய்து   நின்றுகொண்டேயிருந்தான்.

     இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் கண் உறங்காமல்  நின்று
கொண்டே காவல் செய்து கொண்டிருந்தான் என்பதாம். ‘மாலை விரிந்த
நாணல் பாயல்’ - மாலையாகவிரிந்த நாணற்புல் படுக்கை என்றவாறாம்.  22