1983.‘ஐ - இருபத்தோடு ஐந்து
     ஆயிரர் உளர், ஆணை
செய்குநர், சிலை வேடர் -
     தேவரின் வலியாரால்;
உய்கதம் அடியேம் - எம்
     குடிலிடை, ஒரு நாள், நீ
வைகுதிஎனின் - மேல் ஓர்
     வாழ்வு இலை பிறிது’ என்றான்.

     ‘ஆணைசெய்குநர்- நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவராகிய;
தேவரின்வலியார்- தேவர்களைக் காட்டிலும்வலிமை படைத்தவர்களாகிய;
சிலைவேடர் -வில் ஏந்திய வேடர்கள்; ஐஇருபத்தோடு ஐந்து ஆயிரர்
உளர் -
ஐந்து  இலக்கம் பேர்இருக்கின்றார்கள்;
நீஎம் குடிலிடை
ஒருநாள் வைகுதி எனின் -
இராமா!  நீ எம் குடிசையிடத்துஒருநாள்
தங்குவாயானால்;  மேல் ஓர் வாழ்வு பிறிது இலை- எங்களுக்கு
அதைக்காட்டிலும்மேலான வேறொரு வாழ்க்கை இல்லை;  உய்குதும்-
நாங்கள் ஈடேறிவிடுவோம்;  என்றான்-.

     ஐ இருபது - நூறு. அதனோடு ஐந்தைப் பெருக்க ஐந்நூறு ஆயிரவர்
என்று முடியும் ‘நீஎம்......வைகுதி எனின்’ - இரண்டிடத்தும் கூட்டப்பட்டது.
‘ஆல்’ அசை.                                                 31