1996.‘படர் உற உளன், உம்பி
     கான் உறை பகல் எல்லாம்;
இடர் உறு பகை யா? போய்,
     யான் என உரியாய் நீ;
சுடர் உ று வடி வேலாய்!
     சொல் முறை கடவேன் யான்;
வடி திசை வரும் அந் நாள்,
     நின்னுழை வருகின்றேன்.

     ‘சுடர் உறு வடிவேலாய்! - ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற
வேலை உடைய குகனே; உம்பி கான் உறை பகல் எல்லாம் - உன்
தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான்வசிக்கும் நாள்கள் எல்லாம்;
படர் உற உளன் - (எனக்கு வருத்தம் நேராமல்) தான்அந்த
வருத்தத்தைத் தாங்க என்னுடனே இருக்கின்றான்; நீ போய் யான் என
உரியாய் -
நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் ஆட்சி உரிமையில்
இருந்து ஆட்சி புரிவாயாக; யான் வடதிசை வரும் அந்நாள் - நான்
மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும்அக்காலத்தில்; நின்னுழை
வருகின்றேன் -
உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்;  சொல் முறை
கடவென் -
சொல்லிய பேச்சிலிருந்து  மாற மாட்டேன்.’

     ‘யான் என உரியாய்’ நானிருக்குமிடத்தில் நீ இருக்க வேண்டும்
என்பதற்காக நானே நீ,நீயே நான் என்றான் குகனிடம் இராமன். ‘பகல்’
என்றதாயினும் ஆண்டு என்பதாகக் கொள்க.‘எண்ணிய சில நாளில்’ (1984) 
என்பது  போல.                                              44