200.ஒன்றிய உவகையர்;
     ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
     வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
     தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
     நினைந்து கூறினார்.

     தென்னர்- பாண்டியர்; ஏமுற- ஏமம்; உற- பாதுகாப்பு அடைய. 76-9