2005. | ‘பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் மா அலர் சொரி சூழல், துயில் எழு மயில் ஒன்றின் தூவியின்’ மணம் நாற, துணை பிரி பெடை, தான் அச் சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய்! |
பூ அலர் குரவோடும் - பூக்கல் மலர்ந்த குரா மரத்தினோடும்; புடை தவழ் -பக்கங்களில் பரவி வளர்கின்ற; பிடவு ஈனும் - பிடவ மரங்கள் உண்டாக்கிய; மாஅலர் சொரி சூழல் - பெரிய மலர்கள் விழுந்து கிடக்கின்ற சுற்றுப் புறங்களில்; துயில் எழும் - தூங்கி எழுந்த; மயில் ஒன்றின் - ஓர் ஆண் மயிலின்; தூவி -தோகை யானது; இன் மணம் நாற - இனிய மணம் வீச; துணை பிரி பெடை தான் -சேவலைப் பிரிந்த பெண்மயிலானது; அச்சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் - அந்த ஆண்மயிலோடு (வேறு பெண் மயில் உறவு கொண்டதாகக் கருதி) மிகவும் ஊடல்கொண்டு மனம்மாறுபடும் தன்மையை; காணாய்-. குரா, பிடவ மலர்கள் விழுந்த இடத்தில் உறங்கி எழுந்த ஆண்மயிலின் உடல் மணத்தைவேறாகக் கருதிப் பெண்மயில் ஊடியது. 7 |