| 2006. |  ‘அருந்ததி அனையாளே!      அமுதினும் இனியாளே! -  செருந்தியின் மலர் தாங்கும்      செறி இதழ் வன சோகம்  பொருந்தின களி வண்டின்      பொலிவன, பொன் ஊதும்  இருந்தையின் எழு தீ ஒத்து      எழுவன; - இயல் காணாய்! |  
      அருந்ததி அனையாளே! - அருந்ததியை ஒத்தவளே!; அமுதினும்  இனியாளே! - அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே!; செருந்தியின் மலர்  தாங்கும் - செருந்திமலரைத் தாங்கிக்கொண்டுள்ள;  செறி இதழ் -   நெருங்கிய இதழ்களை உடைய;  வனசோகம் - காட்டின் கண் உள்ள  அசோகம் ஆனது; பொருந்தின களி வண்டின் பொலிவன -தம்மிடத்தே  பொருந்தினவாய களிப்பு நிறைந்த வண்டுகளாற்  பொலிவனவாகிய அவை;  பொன்னூதும் இருந்தையின் - பொன்னை வைத்து ஊதுகின்ற  பொற்கொல்லனது  கரியில்;  எழுதீ ஒத்து எழுவது  ஓர் இயல் - மேல்  எழுந்து  எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்ற ஓர் தன்மையை;  காணாய் -.      செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர்  நெருப்பாகவும், அதனைச்சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமை  கொள்க. இருந்தை - கரி.                                         8  |