2007. | ‘ஏந்து இள முலையாளே! எழுத அரு எழிலாளே! காந்தளின் முகை கண்ணின் கண்டு, ஒரு களி மஞ்ஞை, ‘பாந்தள் இது’ என உன்னிக் கவ்விய படி பாரா, தேம் தளவுகள் செய்யும் சிறு குறுநகை - காணாய்! |
ஏந்து இளமுலையாளே! - (சாயாது) மேல் நிமிர்ந்துள்ள இளமையான அழகிய முலையினைஉடையாளே!; எழுத அரு எழிலாளே - ஓவியத்தில் எழுதுதற்கரிய அழகு படைத்தவளே!; ஒருகளி மஞ்ஞை - மயங்கிய ஒரு மயில்; காந்தளின் முகை கண்ணில் கண்டு - காந்தள்அரும்பைத் தன் கண்ணால் பார்த்து; இது பாந்தள் என உன்னி - இது பாம்பு என்று கருதி; கவ்வியபடி பாரா - கல்விக் கொண்ட தன்மையைப் பார்த்து; தேன் தளவுகள்- தேன் பொருந்திய முல்லை அரும்புகள்; செய்யும் சிறு குறு நகை - செய்கின்றஎள்ளும் புண்சிரிப்பினை; காணாய் -. காந்தள் முகையைப் பாம்பு என்று மயில் கவர, அது கண்டு முல்லை சிரிப்பதாகக் கூறியது. முல்லைஅரும்புகள் பற்களைப் போலும் ஆதலின் அம்முல்லை அரும்புகள் தோன்றிய காட்சியைப்சிரிப்பதாகத் தற்குறிப்பேற்றம் செய்தார். சிறு குறு நகை - சிறு என்பது இகழ்ச்சியையும், குறு என்பது புன் சிரிப்பு என்பதனையும் அறிவிக்க வந்தன. களி மஞ்ஞை என்றது போதை மிகுதியால்காந்தள் முகையைப் பாம்பென மயங்கியது எனக் காரணம் கூறியவாறாம். 9 |