2008.‘குன்று உறை வய மாவின்
     குருளையும், இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும்
     பிடி தரு சிறு மாவும்,
அன்றில பிரிவு ஒல்லா;
     அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும்
     களியன பல -. காணாய்!

     குன்று உறை வயமாவின் குருளையும் - மலையில் வாழும் வலிமை
உள்ள புலியின்குட்டியும்; இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி
தரு சிறு மாவும் -
இருள் கீழேசிதறிப் பின்னிக் கொண்டது
என்னும்படியுள்ள கரிய பெண் யானை ஈன்ற சிறிய யானைக் குட்டியும்;
அண்டர்தம் - இடையர்களது;  மனை - வீட்டில்  உள்ள;  ஆவின்
கன்றொடு -
பசுக் கன்றோடு; அன்றில - மாறுபடாதனவாய்;  களியன -
களிப்புடையனவாய்; விளையாடும் பல - விளையாடுகின்ற பல
உயிரினங்களையும்; காணாய் -.

     கரிய பிடி இருள் பின்னிப் பிணைந்திருத்தல் போலும். பிடி மண்ணில்
உள்ளதாதலின்வானத்தில் பரவிய இருள் பூமியில் சிந்திப் பின்னியது போல
என்றார். முனிவர் உறைவிடம்ஆதலின் இவை தம்முள் பகை இலவாய்
வினையாடின என்க.                                            10