201.‘வாள் தொழில் உழவ! நீ
     உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
     உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
     பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
     கங்கர் கூறினார்.

     வாள் தொழில் உழவ! - தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.                                      76-10