2010. | ‘முற்றுறு முகை கிண்டி, முரல்கில சில தும்பி, வில் திரு நுதல் மாதே! அம் மலர் விரி கோங்கின் சுற்று உறு மலர் ஏறித் துயில்வன, சுடர் மின்னும் பொன் தகடு உறு நீலம் புரைவன பல - காணாய்! |
வில் திரு நுதல் மாதே! - வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண்ணே!; சில தும்பி - சில வண்டுகள்; அம் மலர் விரி கோங்கின் - அழகிய மலர்கள்விரிந்துள்ள கோங்க மரத்தினது; முற்றுறு முகை கிண்டி - முற்றிய அரும்புகளைக் குடைந்து(தேன் உண்டு); முரல்கில - பாடாதனவாய்; சுற்று உறு மலர் ஏறி - வட்டமாகப் பொருந்திய மலரில் ஏறி; துயில்வன பல - உறங்குகின்றன பலவும்; சுடர் மின்னும் - ஒளிவிட்டு விளங்குகின்ற; பொன் தகடு உறு- பொன் தகட்டில் பொருந்திய; நீலம் புரைவன- நீல மணியை ஒத்துள்ளனவற்றை; காணாய்-. முற்றுறு முகை - மலரும் பருவத்தரும்பு. அதனையே தேனீக்கள் குடைதல் இயல்பு. கோங்கமலர்பொன்னிறம் படைத்தது. கோங்க மலரில் உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது. 12 |