2013. | ‘மணம் கிளர் மலர், வாச மாருதம் வர வீச, கணம் கிளர்தரு கண்ணம், கல்லிடையன, கானத்து’ அணங்கினும் இனியாய்! உன் அணி வட முலை முன்றில் சுணங்கினம் அவை மானத் துறுவன - அவை காணாய்! |
அணங்கினும் இனியாய்! - தெய்வப் பெண்களைக் காட்டிலும் இனியவளே; உன் அணிவடமுலை முன்றில் கணங்கினம் அவை மான - உன்னுடைய முத்துவடம் அணிந்த முலைப் பரப்பில்உள்ள தேமல் திரளைப்போல; வாச மாருதம் வர வீச - வாசனைபொருந்திய தென்றற்காற்றுமிக வீச; மணம் கிளர் மலர் - மனம் மிக்கு விளங்கும் மலர்களின்; கணம்கிளர்தரு கண்ணம் - கூட்டமாக எழும்பிய மகரந்தப் பொடிகள்; கானத்து -காட்டில்; கல் இடையன - பாறைகளின் இடையில் உள்ளனவாய்; துறுவன அவை -நெருக்கமாகச் சிந்திக் கிடப்பனவற்றை; காணாய் -. மகரந்தப் பொடிக்குத் தேமலை உவமை யாக்கினார். முலைப்பரப்பில் தேமல் போலப் பாறைப்பரப்பில் கண்ணம் நெருங்கிக் கிடப்பன என்று கொள்க. 15 |