2014. | ‘ “அடி இணை பொறைகல்லா” என்றுகொல், அதர் எங்கும், இடை இடை மலர் சிந்தும் இன மரம்? - இவை காணாய்! கொடியினொடு இள வாசக் கொம்புகள், குயிலே! உன் துடி புரை இடை நாணித் துவள்வன - அவை காணாய்! |
குயிலே!- குறில் போன்ற குரல் உடையாளே!; இனமரம்- கூட்டமானமரங்கள்; ‘அடி இணை பொறைகல்லா’ என்று கொல்- (உன்) கால்கள் காட்டு வழியில்நடத்தலைப் பொறுக்கமாட்டா என்று கருதிப் போலும்; அதர் எங்கும் இடை இடை -வழியிடைகளில்எல்லாம்; மலர்களைச் சிதறும்; இவை காணாய் -; கொடியினொடுஇள வாசக் கொம்புகள்- கொடிகளோடு இளைய மலர்மணம் வீசும் பூங்கொம்புகள்; உன் துடி புரை இடை நாணி - உன்னுடையதுடிநடுவை ஒத்தஇடையைக் கண்டு வெட்கம் உற்று; துவள்வன - ஒசிந்து அசைவன; அவை காணாய் -. சீதையின் பாதங்கள் கல்லுறுத்தலினால் தாங்கமாட்டா என்று மரங்கள் வழியிடை மலர்சிந்துவதாகவும் - சீதையின் இடை கண்டு நாணிக் கொடிக் கொம்பு துவள்வதாகவும் கூறியதுதற்குறிப்பேற்றம். இவையிரண்டும் இயல்பாகக் காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளாம். கொடி,பூங்கொம்பு தனித்தனி இடைக்கு உவமையாம். துடி - உடுக்கை. 16 |