2015.‘வாள் புரை விழியாய்! உன்
     மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும்
     தகை ஞிமிறு - இவை காணாய் -!
கோள் புரை இருள் வாசக்
     குழல் புரை மழை - காணாய்!
தோள் புரை இள வேயின்
     தொகுதிகள் -அவை காணாய்!

     வாள் புரை விழியாய்! - வாளை ஒத்த கண்களை உடையவளே!;
உம் மலர் அடி அணிமான -
உன்னுடைய மர் போன்ற பாதங்களில்
அணிந்துள்ள அணிகலனை ஒப்ப; தாள் புரைதளிர் வைகும் - உன்
அடியை ஒத்த  தளிரிலே தங்கியுள்ள; தகை ஞிமிறு - அழகுடைய
வண்டுகளாகிய; இவை காணாய் - ; கோள் புரை இருள் வாசக் குழல்
புரை மழை -
கொள்ளும்குற்றம் உடைய இருள் கொண்டதும்வாசனை
பொருந்தியதுமான கூந்தலைப் போல உள்ள மழை மேகத்தை; காணாய்-;
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை -
(உன்) தோளை ஒத்த
இளமையானமூங்கிலின் தொகுதிகளாகிய அவற்றை; காணாய் -,

     அடிபோன்ற தளிரில் அமர்ந்துள்ள வண்டுகள், மலர் போன்ற அடியில்
அணிந்த அணிகலன்போன்றனவாம். எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டு
மறைக்கும் தன்மை உடையது. ஆதலின், ‘கோள்புரை இருள்’ என்றார்.
புரை - குற்றம். வாள் புரை விழி,  மலர் அடி - உவமையணி. தாள் புரை
தளிர், குழல் புரை மழை, தோள் புரை வேய் - எதிர்நிலை யுவமையணி.  17