2020. | செந் தழல் புரி செல்வன்; திசைமுக முனி செவ்வே தந்தன உயில் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன்; ‘உலகு ஏழும் அமை’ எனின், அமரேசன் உந்தியின் உதவாமே, உதவிடு தொழில் வல்லான். |
செந்தழல்புரி செல்வன்- செந்நிறமுள்ள முத்தீயை வளர்த்தலையே செல்வமாகஉடையவன்; திசை முக முனி - பிரமதேவன்; செவ்வே தந்தன உயிர் எல்லாம் - நேர்மையுறப் படைத்த உயிர்களை எல்லாம்; தன் உயிர் என நல்கும் அந்தணன் - தன்உயிரைப்போலப் பாதுகாக்கின்றஅந்தணன்; ‘உலகு ஏழும் அமை’ எனின் - ஏழுலகங்களையும் படைக்க என்றாலும்; அமரேசன் -தேவ தேவனாகிய திருமால்; உந்தியின் உதவாமே - தனது திருநாபிக்கமலத்தின்மூலமாகப் படைக்க வேண்டாதபடி; உதவிடு - தனது சங்கற்பத்தாலேயேபடைக்கும்; தொழில் வல்லான் - தொழிலில் வல்லவன். பரத்துவாச முனிவனது அருளாற்றலும் தவ ஆற்றலும் கூறியவாறு. எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூணுதலே அந்தணர் இயல் என்ற குறளினைக் கம்பர் நினைவுக்கூர்கிறார். 22 |