முனிவன், இராமன் வனம் வந்த காரணம் வினாவல்  

2021.அம் முனி வரலோடும்,
     அழகனும், அலர் தூவி
மும் முறை தொழுதான்; அம்
     முதல்வனும், எதிர்புல்லி,
‘இம் முறை உருவோ நான்
     காண்குவது?” என உள்ளம்
விம்மினன்; இழி கண்ணீர்
     விழி வழி உக நின்றான்

     அம் முனி வரலோடும் - அத்தகைய பரத்துவாச முனிவன் வந்த
அளவில்; அழகனும் -இராமனும்; அலர் தூவி - மலர்களைத் தூவி;
மும்முறை தொழுதான் - மூன்று முறைவணங்கினான்; அம் முதல்வனும்-
அந்தப் பெரியோனாகிய பரத்துவாசனும்;  எதிர்புல்லி - எதிரே தழுவி;
இம்முறை உருவோ நான் காண்குவது என- இப்படிப்பட்டவேடத்தொடு
கூடிய வடிவத்தையோ என் கண்ணால் காணும்படியானது  என்று;  உள்ளம்
விம்மினன் -
மனம் பொருமினனாய்; இழி கண்ணீர் விழி வழி உக
நின்றான் -
கீழ்நோக்கிஇறங்கும் கண்ணீர் கண்களின் வழிவந்து கீழே
சிந்தும்படி நின்றான்.

     அரச குமாரனின் தவக் கோலத்தைக் கண்டானாதலின் ‘இம்முறை
உருவோ நான் காண்பது’ என்றுஇரங்கினான்.                       23