2022.‘அகல் இடம் நெடிது ஆளும்
     அமைதியை; அது தீர,
புகல் இடம் எமது ஆகும்
     புரையிடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம்
     தழுவினை வருவான் என் -
இகல் அடு சிலை வீர! -
     இளையவனொடும்?’ என்றான்.

     ‘இகல் அடு சிலை வீர! - பகையை அழிக்கின்ற வில்லை ஏந்திய
வீரனாகியஇராமனே!; அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை- பரந்த
இவ்வுலகம் முழுமையும் நீண்ட காலம்ஆளக்கூடிய தகுதியை உடையாய்;
அது தீர - அத்தன்மை நீங்க;  இது நாளில் -இப்போது;  புகல் இடம்
எமது ஆகும் புரை இடை -
 எம்போன்ற தவமுனிவர்கள் தங்கிவாழும்
இடமாகிய குகைகள் உள்ள வனத்திடத்து; தகவு இல தவ வேடம் - உன்
தன்மைக்குப்பொருந்தாத தவத்தோர் வேடத்தை; இளையவனொடும் -
இலக்குவனோடும்;  தழுவினை -மேற்கொண்டவனாய்; வருவான் என்?
‘என்றான் -
வருவதற்கு என்ன காரணம்’ என்றுவினவினான்.

     அரச குமாரனாகிய இராமனுக்கு மரவுரியும் சடைமுடியும் ஆகிய
தவக்கோலம் பொருந்தாது  என்றுகருதி. ‘தகவு இல தவ வேடம்’ என்றார்
என்பதாம். புரை - குகை. முனிவர்கள் குகைகளில் தங்கிவாழ்தல் பழக்கம்.
அவை உள்ள இடம் காடு ஆகும்.                                24