முனிவனது ஆசிரமத்திற்கு இராமன் முதலியோர் செல்லுதல் 2025. | ‘அல்லலும் உள’ இன்பம் அணுகலும் உள அன்றோ? நல்லவும் உள; செய்யும் நவைகளும் உள; அந்தோ! இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின்’ என்னா, புல்லினன், உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான். |
‘அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ? - துன்பமும் இன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வந்து சேருதல் உண்டு அல்லவா?; நல்லவும் உள செய்யும் நவைகளும்உள; அந்தோ! - நாம்செய்யும் நல்வினைகளும் உள்ளன; தீவினைகளும் உள்ளன. ஐயோ!(அவற்றின் பயனே இன்ப துன்பங்கள்) ஆகவே; நான் இன்று இடர் உறும் இதின் ஓர் பயன்இல்லை - நான் இன்று துன்பப்படுகின்ற இதனால் ஒரு பயனும் இல்லை;’ என்னா - என்றுமுனிவன் கூறி; புல்லினன் - இராமனைத் தழுவியவனாய்; உடனே கொண்டு - சேரஅழைத்துக் கொண்டு; இனிது உறை புரை புக்கான் - தான் இனிதாகத் தங்கி யுள்ளதாகிய தவச்சாலையிற் புகுந்தான். அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப விதிவழி இன்ப துன்பங்கள் விளையும். ஆதலின், இராமா! நீ வனம் புகுந்தது கருதி நான் வருந்துவதில் பயன் ஏதும் இல்லை என்றுபரத்துவாசன் கூறினான். 27 |