முனிவன் விருந்தோம்புதுல்  

2026. புக்கு, உறைவிடம் நல்கி,
     பூசனை முறை பேணி,
தக்கன கனி காயும்
     தந்து, உரைதரும் அன்பால்
தொக்க நல்முறை கூறி,
     தூயவன் உயிர்போலம்
மக்களின் அருள் உற்றான்;
     மைந்தரும் மகிழ்வு உற்றார்.

     புக்கு - தவச்சாலையில் புகுந்து;  உறைவிடம் நல்கி - அவர்கள்
தங்குதற்குரிய இடத்தைத் தந்து  உபசரித்து;  தக்கன கனி காயும் தந்து -
உண்ணத்தக்கனவாகிய காய் கனிகளையும் கொடுத்து;  உரைதரும்
அன்பால்
-பாராட்டத்தகுந்த அன்போடு;  தொக்க நல் முறை கூறி -
கூடிய நல்ல உபசாரவார்த்தைகளைச் சொல்லி;  தூயவன் - தயரதனது;
உயிர் போலும் - உயிர்போலச் சிறந்த; மக்களின் - பிள்ளைகளினிடத்து;
அருள் உற்றான் - அருளைச்செய்தான்; மைந்தரும் மகிழ்வு உற்றார் -
முனிவனது  உபசரிப்பில் இராமலக்குவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

     சீதை இராமனுள் அடங்கியவள் ஆதலின் மைந்தர் என்றார். தூயவன்
பரத்துவாசனும்ஆம்.                                          28