203.‘கொங்கு அலர் நறு விரைக்
     கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
     தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
     செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் - ‘இங்கு இதில்
     சிறந்தது இல்’ என்றார்.

     கோதை - மாலை;  மோலி - மௌலி,  அதாவது  மகுடம்;
அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன்.                  76-12