முனிவன் கூறிய அறிவுரை  

2031.‘ஆவது உள்ளதே; ஐய! கேள்;
     ஐ - இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம்
     கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர் -
     விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர
     கூடம் என்று உளதே.’

     ‘ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ
சொல்லியது உண்மையே ஆகும்;  ஐ இரண்டு அமைந்த காவதப்
பொழிற்கு?
-  பத்துக் காததூரம்  உள்ள இச் சோலைக்கு; அப்புறம்
கழிந்தபின் -
அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர
கூடம் என்று உளது
- தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம்என்று
பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும்
இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு
அவ்விடத்தில் தங்கியிருப்பீர்.’

     இராமன் கூறியது  உண்மையே என்பதை ‘ஆவது உள்ளதே’ என்று
கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான்.அதனால், மேலும் வற்புறுத்தவில்லை.
‘ஏ’ இரண்டும் தேற்றம்.                                         33