யமுனையில் மூவரும் நீராடி உணவு அருந்தல் 2033. | ஆறு கண்டனர்; அகம் மகிழ்ந்து இறைஞ்சினர்; அறிந்து, நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்; ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு, நீர் உண்டார்; ‘ஏறி ஏகுவது எங்ஙனம்?’ என்றலும், இளையோன், |
நீறுதோய் மணிமேனியர் - வழி நடந்ததால் புழுதி படிந்த அழகிய உடம்பினைஉடையவர்; ஆறு கண்டனர் - யமுனையாற்றைக் கண்டு; அகம் மகிழ்ந்து - மன மகிழ்ச்சி அடைந்து;இறைஞ்சினர் - வணங்கி; அறிந்து - செய்ய வேண்டிய கடன் முறைகளைஉணர்ந்து; நெடும்புனல் படிந்தார்- மிக்க நீரிலே மூழ்கி எழுந்து; கிழங்கினோடுஊறு மென்களி உண்டு - கிழங்குடனேசுவை மிகுதியுள்ள மெல்லிய பழங்களையும் உண்டு; நீர் உண்டார் - தண்ணீர்பருகினர்; ‘ஏறி ஏகுவது எங்ஙனம்’ என்றலும் - ‘யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு?’ என்று இராமன் கூறுதலும்; இளையோன் - இலக்குவன் யமுனை யாற்றில் நண்பகல் நீர்மூழ்கி வழிபாடு செய்து உணவு கொண்டு நீர் உண்டவர்யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு என்று சிந்தித்த அளவில் இலக்குவன் பின்வருமாறுசெய்தான் என அடுத்த பாட்டில் முடியும். 35 |