இலக்குவன் தெப்பம் அமைத்து இருவரையும் அக்கரை சேர்த்தல் 2034. | வாங்கு வேய்ங் கழை துணித்தனன்; மாணையின் கொடியால், ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து, அதன் உம்பரின், உலம்போல் வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப, நீங்கினான், அந்த நெடு நதி, இரு கையால் நீந்தி,. |
(இளையோன்) வாங்கு வேய்ங்கழை துணித்தனன் - வளையும் தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மாணையின் கொடியால் - மானைக் கொடிகளைக் கொண்டு; ஒங்குதெப்பம் ஒன்று அமைத்து - உயர்ந்த தெப்பம் ஒன்றைக் கட்டி; அதன் உம்பரில் -அதன்மேல்; உலம் போல் வீங்க தோள் அண்ணல் - திரண்டு உருண்ட கல்லைப் போலப் பருத்த தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - சீதாபிராட்டியுடனேஇனிமையாகத் தங்கியிருப்ப; அந்த நெடு நதி - அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி - தன் இரு கையாலும் நீந்தி; நீங்கினான் - கடந்தான். தெப்பத்தைத் தள்ள வேண்டும் ஆதலின் இலக்குவன் அது செய்தான் என்பார் நீந்திக்கடந்தான் என்றார். 36 |